×

நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக வேண்டும் என மக்கள் விரும்புகிறார்கள்: மதுரை ஆதீனம் பேட்டி

மதுரை: மோடி மீண்டும் பிரதமராக வேண்டும் என மக்கள் விரும்புகிறார்கள் என மதுரை ஆதீனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய மதுரை ஆதீனம்; ஆக்கிரமிப்பில் உள்ள மதுரை ஆதீனம் சொத்துக்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும். மதுரையில் உள்ள ஆதீனம் சார்பில் விவசாய பல்கலைக்கழகம் கொண்டு வர போகிறோம். பிரதமரிடம் பல்கலைக்கழக அமைக்க கோரிக்கை விடுத்துள்ளேன். பிரதமர் நரேந்திரமோடி மீண்டும் பிரதமராகும் வாய்ப்புகள் உள்ளது.

மோடி தமிழர்களுக்கு விரோதமானவர் அல்ல. தமிழ்நாட்டை தமிழர்கள்தான் ஆள வேண்டும்; தமிழுக்கும், தமிழர்களுக்கும் பெருமை சேர்க்கும் வண்ணம், உலகம் முழுவதும் சென்று திருக்குறளைதான் எடுத்துரைக்கிறார் பிரதமர் மோடி. மோடி மீண்டும் பிரதமராக வேண்டும் என மக்கள் விரும்புகிறார்கள். அவருடைய தமிழ் உணர்வுக்கு 3 வது முறையாக பிரதமர் ஆகலாம். இலங்கை தமிழர்களுக்காக நிறைய உதவிகளை மோடி செய்துள்ளார் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

The post நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக வேண்டும் என மக்கள் விரும்புகிறார்கள்: மதுரை ஆதீனம் பேட்டி appeared first on Dinakaran.

Tags : Narendra Modi ,PM ,Madurai Adenam ,Madurai ,Modi ,Adenam ,Dinakaran ,
× RELATED முதலமைச்சர், பிரதமராக இருந்தும் என்...